இந்திய மக்கள் வளமையடைய வாழ்த்துக்கள்... மோடிக்கு சுதந்திர தின வாழ்த்து அனுப்பிய நவாஸ் ஷெரீப்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய மக்கள் வளமையடைய வேண்டும் என சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

68வது இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழாவை யொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில். ‘இந்திய மக்கள் வளமை அடைய வாழ்த்துக்கள்' என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய பாகிஸ்தான் சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின் போது நவாஸ் ஷெரீப், ‘காஷ்மீர் பிரச்சினையில் அமைதித் தீர்வு காண விரும்புவதாக' பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications