கலாம் வசித்த டெல்லி பங்களாவில் குடியேறும் அமைச்சர் மகேஷ் சர்மா
டெல்லி: டெல்லி ராஜாஜி மார்க்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வசித்த பங்களாவில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா குடியேறுகிறார்.
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு அப்தல் கலாம் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பங்களாவில் தான் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து தங்கி வந்தார். கலாம் மறைவுக்கு பிறகு அந்த பங்ளாவை காலி செய்யுமாறு மத்திய அரசு அவரின் உதவியாளரிடம் தெரிவித்திருந்தது.
கலாம் வசித்த பங்களாவை அவரது நினைவு மண்டபமாக மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கலாம் வசித்த பங்களாவில் சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா குடியேற உள்ளார்.

இது குறித்து மகேஷ் சர்மா கூறுகையில்,
ராஜாஜி மார்க் பங்களா எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பங்களாவை நினைவு மண்டபமாக மாற்றுவது இல்லை என்பது அரசின் கொள்கை. 11 மாதங்கள் கழித்து எனக்கு அரசு பங்களா கிடைத்துள்ளது. முன்னதாக தியாக்ராஜ் மார்க் பங்களா எனக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கிருந்தவர்கள் காலி செய்யாததால் என்னால் அங்கு குடியேற முடியவில்லை என்றார்.
ராஜாஜி மார்க் பங்களாவில் உள்ள கலாம் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வரும் 31ம் தேதிக்குள் காலி செய்யப்பட வேண்டும். அவை ராமேஸ்வரத்தில் உள்ள கலாமின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
கலாம் முஸ்லீமாக இருந்தபோதிலும் சிறந்த தேசியவாதியாக இருந்தார் என்று விமர்சித்த மகேஷ் சர்மா அவர் வசித்த பங்களாவில் குடியேற உள்ளார்.












Click it and Unblock the Notifications