டெல்லியில் ஆம் ஆத்மிக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவு: ஷீலா தீட்சித்!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் கூடிய ஆதரவைத்தான் காங்கிரஸ் அளித்திருக்கிறது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
டெல்லியில் சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற இழுபறி நிலைமை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கப் போவதாக இன்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.
ஆம் ஆத்மியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆம் ஆத்மி அரசுக்கு வெளியில் இருந்துதான் நிபந்தனைகளுடன் ஆதரவு தருகிறது. நிபந்தனையில்லா ஆதரவு தருவதாக ஆம் ஆத்மி கட்சியினர்தான் வதந்திகளை பரப்பி வருகின்றனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
மக்களுக்கான துரோகம்- பாஜக
இதனிடையே டெல்லி பாஜக சட்டசபை தலைவர் ஹர்ஷவர்தன் கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைப்பது மக்கள் தீர்ப்புக்கு துரோகம் செய்யக் கூடியதாகும். வாக்களித்த மகக்ளுக்கு ஆம் ஆத்மி கட்சி துரோகமிழைகிறது என்று சாடியிருக்கிறார்












Click it and Unblock the Notifications