சோனியா ஒரு நரி, இமாம் புகாரி ஒரு ஓநாய்: சொல்கிறார் உத்தவ் தாக்கரே
மும்பை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு நரி என்றும், டெல்லி ஜும்மா மஸ்ஜித் இமாம் ஒரு ஓநாய் என்றும் சிவசேனா தெரிவித்துள்ளது.
இது குறித்து சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தங்கள் கட்சி பத்திரிக்கையான சாம்னாவில் எழுதியிருப்பதாவது,
இமாம் புகாரி மற்றும் சோனியா காந்தி சந்தித்துள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில் மதச்சார்பற்ற வாக்குகள் பிரிந்துவிடக் கூடாது என்பது குறித்து ஆலோசித்துள்ளனர். இது நரியும், ஓநாயும் சேர்ந்து அஹிம்சை மற்றும் சைவம் பற்றி பேசுவது போன்று ஆகும்.

இறுதியில் சோனியா இமாம் புகாரி முன் சரணடைந்துள்ளார். இது தான் காங்கிரஸின் மரணம். தற்போது இமாம் பத்வா விட்டு முஸ்லீம்களை காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கூறுவார். ஆனால் இமாம்கள் விடும் பத்வாக்களை யார் கேட்கிறார்கள்?
இமாம்களும், மவுலவிகளும் நெயில் பாலிஷ் கலர், லிப்ஸ்டிக் பயன்பாடு போன்ற அர்ப விஷயங்களுக்கு எல்லாம் பத்வா விடுவார்கள். ஏழ்மையை போக்க இமாம் புஹாரி இதுவரை பத்வா விடவில்லை. இந்திரா காந்தியும் ஜும்மா மஸ்ஜித் இமாம் உதவியை நாடினார். உடனே இமாமும் முஸ்லீம்களை காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு கூறி பத்வா விட்டார். அப்படியும் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. அதில் இருந்து முஸ்லீம்கள் அவரது பத்வாவை கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications