குடும்பக் கட்டுப்பாடு செய்து முஸ்லீம்கள் நாட்டுக்கு உதவவேண்டும்...சிவசேனா அறிவுரை..
மும்பை: குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை முஸ்லிம் மக்கள் உணர்ந்து நாட்டுக்கு உதவ வேண்டும் என்று சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்போது முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், இது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சிவசேனா அதன் கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது...

முஸ்லிம் மக்கள் தொகைக்கு இணையாக இந்து மக்கள்தொகையை பெருக்குவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்துவிடாது. அனைத்து மதங்களுக்கும் கட்டாய குடும்ப கட்டுபாட்டை அமல்படுத்த வேண்டும் என்பதை மத்திய அரசிடம் சங் பரிவார் வலியுறுத்த வேண்டும்.
கடந்த 2001 முதல் 2011 வரையில் முஸ்லிம் மக்கள்தொகை 24 % உயர்ந்துள்ளது. 2015 வரையில் இது நிச்சயம் 5 முதல் 10 % க்கு மேலும் உயர்ந்திருக்கும். மக்கள் தொகை தொகை உயர்வால் மொழி, புவியியல், ஏற்றத்தாழ்வு உருவாகும். இதனால் நாட்டின் ஒற்றுமையில் பிளவு ஏற்படும்.
இந்த மண்ணின் சட்டத்துக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்றும் குடும்பகட்டுபாட்டை ஏற்றுக்கொள்வதின் அவசியத்தையும் முஸ்லீம்களுக்கு பிரதமர் மோடி தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
நள்ளிரவில் வந்து கதவை தட்டினால் கூட உங்கள் பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக பிரதமர் முஸ்லீம்களுக்கு உறுதி அளித்துள்ளார். அதேபோல், மூஸ்லீம்களும் நாட்டுக்கு உதவுவது போல் செயல்படுவார்களா?
இவ்வாறு சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications