மாயாவதிக்கும் கன்சிராமுக்குமான உறவு என்ன?: கேள்வி எழுப்பும் சமாஜ்வாடி கட்சி
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கும் அக்கட்சியின் நிறுவனர் மறைந்த கன்சிராமுக்குமான உறவு என்ன என்பது குறித்து சமாஜ்வாடி கட்சி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசார களம் தனி நபர் தாக்குதல்களை மையமாகக் கொண்டுதான் விஸ்வரூபமெடுத்துள்ளது. அண்மையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், மாயாவதியின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மாயாவதி, முலாயம்சிங்கை மனநல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனிடையே முலாயம்சிங்கின் சகோதரர் சிவ்பால் யாதவ் தம் பங்குக்கு மாயாவதியை விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக கூறிய சிவ்பால் யாதவ்,. மாயாவதி எப்படிப்பட்ட நடத்தை உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஏன் மறைந்த கன்சிராமை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்? இப்போது மாயாவதிதான் புத்தி பேதலித்து பேசுகிறார். அவருக்குத்தான் மனநல சிகிச்சை அவசியம் என்று கூறியிருக்கிறார்.
இந்த விமர்சனத்துக்கு பகுஜன் பதில் எப்படி இருக்கப் போகிறதோ?












Click it and Unblock the Notifications