நிலம், நீர், மொழியைவிட மனிதாபிமானம் முக்கியம்.. இரு மாநில மக்கள் அமைதிகாக்க சித்தராமையா கோரிக்கை
பெங்களூர்: பொதுமக்கள் அமைதிகாக்க முதல்வர் சித்தராமையா நேற்று அறிக்கை மூலம் கோரிக்கைவிடுத்தார். இன்று டிவி செய்தி சேனல்களில் வீடியோ மூலம் சித்தராமையா அமைதிக்காக கோரிக்கை விடுத்தார்.
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது, தமிழகத்தில் கன்னடர் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்களால் பெங்களூரில் நேற்று கன்னட அமைப்பினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் வாகனங்கள் தீக்கிரையாகின. அடையார் ஆனந்தபவன், பூர்வீகா போன்ற தமிழக நிறுவனங்கள் பெங்களூரில் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து மாலையில் 144 தடையுத்தரவு பெங்களூரில் அமல்படுத்தப்பட்டது. கலவரம் தொடர்ந்ததால், 16 காவல் நிலைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெங்களூர் நகர நிலவரம் உலகமெங்கும் சர்ச்சைக்குள்ளானது. கண்டனத்திற்குள்ளானது.
இந்நிலையில் பொதுமக்கள் அமைதிகாக்க முதல்வர் சித்தராமையா நேற்று அறிக்கை மூலம் கோரிக்கைவிடுத்தார். இன்று டிவி செய்தி சேனல்களில் வீடியோ மூலம் சித்தராமையா அமைதிக்காக கோரிக்கை விடுத்தார்.
அதில் அவர் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு அடுத்தடுத்து அநியாயம் இழைக்கப்படுவதால் கன்னடர்கள் ஆதங்கத்தில் இருப்பது உண்மைதான். தமிழகத்தில் கன்னடர் தாக்கப்பட்டது, கன்னடர் ஹோட்டலில் தாக்குதல் நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கதுதான். நிலம், நீர், மொழி ஆகிய விவகாரங்களில் கன்னடர்கள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டவர்கள் என்பதும் உண்மைதான்.
ஆனால், இந்த அனைத்து எல்லைகளையும் விட மனித மனத்திலுள்ள மனிதாபிமானம் முக்கியம். எனவே இரு மாநில மக்களும், வன்முறை போராட்டத்தை கைவிட வேண்டும். கன்னடர்கள் அமைதி பிரியர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா கோரிக்கைவிடுத்தார்.
-
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications