அமைதிப் பூங்காவாக திகழ்கிறது கர்நாடகம்... முதல்வர் சித்தராமையா சுதந்திர தின உரை
பெங்களூரு : எவ்வித வன்முறை, மதவாத சண்டைகள் இன்றி, கர்நாடக மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு, மானக்க்ஷா அணிவகுப்புத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் மாநில மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது...

இந்த நன்னாளில் நமது சுதந்திரத்திற்காக தீரமுடன் போராடி உயிர்த்தியாகம் செய்த முன்னோர்களை நன்றியுடன் நினைத்துபார்க்கதவறக்கூடாது. சுதந்திரதினத்தை கொண்டாடுவது மட்டுமல்லாது, மொழி,கலாசாரம், மத வேறுபாடுகளை துறந்து நாம் அனைவரும் ஒன்று என்ற சிந்தனையை விதைக்க வேண்டும். நமது தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 90 ஆண்டுகள் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாது, சுதந்திர இந்தியா குறித்த கனவுகளை கட்டமைத்திருந்தனர்.
சுதந்திரபோராட்டத்தை தலைமையேற்று நடத்திய மகாத்மாகாந்தி, கிராம சுயாட்சியை காண விழைந்தார். மதசார்பின்மை மற்றும் தற்சார்பின் அடித்தளத்தில் எழுச்சிபெற்ற இந்தியாவை காணவிரும்பினார் நேரு.
முற்போக்கான அரசியலமைப்புச்சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர், அரசியல் சுதந்திரத்தை காட்டிலும் பொருளாதார சுதந்திரத்தின் அவசியத்தை உணர்த்தினார்.
இந்த எண்ணங்கள் அனைத்தும் நமது அரசியலமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. நமது தலைவர்களின் கனவுகள், எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற நமக்கு நாமே சுயபரிசோதனை செய்துகொண்டு ஆக்கப்பூர்வமான நடையை எடுத்துவைப்பது நல்லது.
கடந்த 68 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நமது நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. எனினும், வளர்ச்சியின் பலன் சமூகத்தின் அனைத்துதரப்பு மக்களையும் சென்று சேரும் போதுதான் நமது சுதந்திரத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். எந்த வன்முறை சம்பவங்களும், மதவாத சண்டைகளும் இல்லாமல் கர்நாடகமாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. தீவிரவாத செயல்களை தடுக்க பெங்களூருவில் மத்திய கட்டளை மையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
பொதுமக்களின் பாதுகாப்பை கருதி 10 மகளிர் காவல்நிலையங்கள் உள்பட 30 புதிய காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத, தேச விரோத செயல்களை தடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு தனது சுதந்திர தின உரையில் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications