Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைதிப் பூங்காவாக திகழ்கிறது கர்நாடகம்... முதல்வர் சித்தராமையா சுதந்திர தின உரை

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு : எவ்வித வன்முறை, மதவாத சண்டைகள் இன்றி, கர்நாடக மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

பெங்களூரு, மானக்க்ஷா அணிவகுப்புத்திடலில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திரதினவிழாவில் மாநில மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது...

 Siddaramaiah

இந்த நன்னாளில் நமது சுதந்திரத்திற்காக தீரமுடன் போராடி உயிர்த்தியாகம் செய்த முன்னோர்களை நன்றியுடன் நினைத்துபார்க்கதவறக்கூடாது. சுதந்திரதினத்தை கொண்டாடுவது மட்டுமல்லாது, மொழி,கலாசாரம், மத வேறுபாடுகளை துறந்து நாம் அனைவரும் ஒன்று என்ற சிந்தனையை விதைக்க வேண்டும். நமது தலைவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 90 ஆண்டுகள் போராட்டம் நடத்தியது மட்டுமல்லாது, சுதந்திர இந்தியா குறித்த கனவுகளை கட்டமைத்திருந்தனர்.

சுதந்திரபோராட்டத்தை தலைமையேற்று நடத்திய மகாத்மாகாந்தி, கிராம சுயாட்சியை காண விழைந்தார். மதசார்பின்மை மற்றும் தற்சார்பின் அடித்தளத்தில் எழுச்சிபெற்ற இந்தியாவை காணவிரும்பினார் நேரு.

முற்போக்கான அரசியலமைப்புச்சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கர், அரசியல் சுதந்திரத்தை காட்டிலும் பொருளாதார சுதந்திரத்தின் அவசியத்தை உணர்த்தினார்.

இந்த எண்ணங்கள் அனைத்தும் நமது அரசியலமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. நமது தலைவர்களின் கனவுகள், எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற நமக்கு நாமே சுயபரிசோதனை செய்துகொண்டு ஆக்கப்பூர்வமான நடையை எடுத்துவைப்பது நல்லது.

கடந்த 68 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் நமது நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. எனினும், வளர்ச்சியின் பலன் சமூகத்தின் அனைத்துதரப்பு மக்களையும் சென்று சேரும் போதுதான் நமது சுதந்திரத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். எந்த வன்முறை சம்பவங்களும், மதவாத சண்டைகளும் இல்லாமல் கர்நாடகமாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது. தீவிரவாத செயல்களை தடுக்க பெங்களூருவில் மத்திய கட்டளை மையத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

பொதுமக்களின் பாதுகாப்பை கருதி 10 மகளிர் காவல்நிலையங்கள் உள்பட 30 புதிய காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத, தேச விரோத செயல்களை தடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தனது சுதந்திர தின உரையில் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+