பொற்கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதல் வருத்தமளிக்கிறது... சீக்கிய தலைவர்கள் வேதனை
அமிர்தசரஸ்: சீக்கியர்களின் புனித தளமான அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடந்து முடிந்த 30-ம் வருட நினைவு நாளில் இரு கோஷ்டிகள் கலவரத்தில் ஈடுபட்டு வன்முறைத் தாக்குதலில் இறங்கியது மிகவும் வருத்ததுக்கு உரிய செயலாகும் என சிரோமணி அகாலி தள தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை அப்புறப்படுத்த இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் புளூஸ்டாரில் சீக்கியர்கள் பலர் பலியானார்கள். இதனை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிக்ழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு அமிர்தசரஸ் பொற்கோவிலில் ‘ஆபரேஷன் புளூஸ்டாரின் 30-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவில் வளாகத்தில் இரு பிரிவினருக்கு இடையே திடீர் மோதல் உண்டானது. இதில் சம்பவ இடத்தில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவம் குறித்து சிரோமணி அகாலி தளத்தின் செய்தி தொடர்பாளர் பிரேம் சிங் சந்துமஜ்ரா டெல்லியில்செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
சீக்கியர்களின் புனிததலமான அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடந்து முடிந்த 30-ம் வருட நினைவு நாளில் இரு கோஷ்டிகள் கலவரத்தில் ஈடுபட்டு வன்முறைத் தாக்குதலில் இறங்கியது மிகவும் வருத்ததுக்கு உரிய செயலாகும். இந்த சம்பவம் சீக்கியர்கள் அனைவருக்கும் மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்படுவார்கள்.
மேலும், இந்த நாட்டில் நடைபெறும் சிறு சிறு சம்பவங்கள் கூட நாடாளுமன்றத்தில் பெருத்த கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான மதக்கலவரத்தில் உயிரிழந்த அப்பாவிகளின் மரணத்துக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்து இருக்க வேண்டும்' என அவர் கண்டனம் தெரிவித்தார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications