பொற்கோவிலில் நடந்த வன்முறைத் தாக்குதல் வருத்தமளிக்கிறது... சீக்கிய தலைவர்கள் வேதனை
அமிர்தசரஸ்: சீக்கியர்களின் புனித தளமான அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடந்து முடிந்த 30-ம் வருட நினைவு நாளில் இரு கோஷ்டிகள் கலவரத்தில் ஈடுபட்டு வன்முறைத் தாக்குதலில் இறங்கியது மிகவும் வருத்ததுக்கு உரிய செயலாகும் என சிரோமணி அகாலி தள தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை அப்புறப்படுத்த இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் புளூஸ்டாரில் சீக்கியர்கள் பலர் பலியானார்கள். இதனை நினைவு கூறும்வகையில் ஆண்டுதோறும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிக்ழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு அமிர்தசரஸ் பொற்கோவிலில் ‘ஆபரேஷன் புளூஸ்டாரின் 30-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பொற்கோவில் வளாகத்தில் இரு பிரிவினருக்கு இடையே திடீர் மோதல் உண்டானது. இதில் சம்பவ இடத்தில் இருந்த 12 பேர் காயம் அடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவம் குறித்து சிரோமணி அகாலி தளத்தின் செய்தி தொடர்பாளர் பிரேம் சிங் சந்துமஜ்ரா டெல்லியில்செய்தியாளர்கள் மத்தியில் கூறியதாவது:-
சீக்கியர்களின் புனிததலமான அமிர்தசரஸ் பொற்கோவிலில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடந்து முடிந்த 30-ம் வருட நினைவு நாளில் இரு கோஷ்டிகள் கலவரத்தில் ஈடுபட்டு வன்முறைத் தாக்குதலில் இறங்கியது மிகவும் வருத்ததுக்கு உரிய செயலாகும். இந்த சம்பவம் சீக்கியர்கள் அனைவருக்கும் மிகவும் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்படுவார்கள்.
மேலும், இந்த நாட்டில் நடைபெறும் சிறு சிறு சம்பவங்கள் கூட நாடாளுமன்றத்தில் பெருத்த கவனத்தைப் பெறுகின்றன. ஆனால் 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான மதக்கலவரத்தில் உயிரிழந்த அப்பாவிகளின் மரணத்துக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவித்து இருக்க வேண்டும்' என அவர் கண்டனம் தெரிவித்தார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications