டெல்லியில் ராணுவ வீரரின் மனைவியை சீரழித்த திருமணம் நிச்சயமான எய்ம்ஸ் டாக்டர்
டெல்லி: கெஜ்ரிவால் ஆட்சி செய்யும் டெல்லியில் ராணுவ வீரரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த 27 வயது எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூர்கா ரெஜிமென்ட்டில் ராஜஸ்தானில் பணிபுரியும் ராணுவ வீரரின் 25 வயது மனைவிக்கு பியூட்டி பார்லரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவர் கடந்த 20ம் தேதி தலைநகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிக்கிமைச் சேர்ந்த அந்த 25 வயது பெண்ணை டெல்லி அழைத்து வந்தவர்கள் அவரை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர். வியாழக்கிழமை இரவு அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றி டெல்லி ஹவ்ஸ் காஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் மெஹர் தேஸின்(27) வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
மெஹர் தனது வீட்டில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீசாருக்கு போன் செய்து தனது பெண் பயணி ஒருவர் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி அழுவதாக தெரிவித்தார். இதையடுத்து தான் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்து வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் டாக்டர் மெஹர், அந்த பெண்ணை டெல்லிக்கு அழைத்து வந்த சுமன்(37), அவரது கணவர் தீபக்(40), அவர்களின் உதவியாளர்கள் தரம்வீர்(32), கமல்(31) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
டாக்டர் மெஹர் தேஸ் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது. விசாரணையில் போலீசாரிடம் டாக்டர் கூறுகையில்,
பணத்திற்கு யாராவது பெண்ணை அழைத்து வர முடியுமா என்று பாலியல் புரோக்கரிடம் கேட்டேன். அவரும் என்னிடம் ரூ.9 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஒரு பெண்ணை என் வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த பெண் இரவு முழுவதும் என் வீட்டில் இருந்தார். விருப்பப்பட்டு தான் என்னுடன் உறவு கொண்டார் என்றார்.












Click it and Unblock the Notifications