சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல் செய்தது மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தான்: அத்வானி
டெல்லி: சுதந்திர இந்தியாவில் அதிக ஊழல்கறைபடிந்த அரசாங்கமாக மன்மோகன் சிங் அரசு பெயர் எடுத்துள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி.
இது குறித்து தனது இணைய பக்கத்தில் அத்வானி கூறியுள்ளதாவது:-
மன்மோகன் சிங் தனது ஆட்சி காலத்தை தொடங்கும் போது நேர்மையான மனிதர் என்ற புகழோடு தொடங்கினார்.ஆனால் அவரது நீண்ட ஆட்சி காலம் முடிவுபெறும் தருவாயில், அவர் தலைமையிலான அரசுதான் சுதந்திர இந்தியாவின் அதிகப்படியான ஊழலை கொண்டதாக உள்ளது' என.இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.
ஏற்கனவே, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ‘மன்மோகன் சிங் பிரதமாராக இல்லாமல் இருந்தால் நான் அவரை மிகவும் விரும்பி இருப்பேன்.ஏனெனில் நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் சிறந்த முறையில் நிதி அமைச்சராக அவர் பணியாற்றினார்' என அத்வானி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.