சத்தீஸ்கர்: நக்சல்கள் கண்ணிவெடித் தாக்குதல்: 11 பேர் பலி
பிஜப்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தின் இருவேறு இடங்களில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 5 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பத்து பேர் காயமடைந்தனர்.
பஸ்தர் தொகுதியில் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு தேர்தல் அலுவலர்கள் திரும்பிக்கொண்டிருந்தனர். கெட்டுல்நர் கிராம் அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த நக்சல்கள் நிலத்தில் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியை வெடிக்க செய்தனர். இதில் 6 தேர்தல் அலுவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குல் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே கமனார் கிராமத்திலும் நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது நக்சல்கள் கண்ணி வெடியை வெடிக்கச் செய்தனர். இதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து தாக்குதல் நடத்திய நக்சல்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications