ஜம்மு - காஷ்மீரில் என்கவுண்டர்... 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் இன்று அதிகாலை நடந்த என்கவுண்டரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
ஸ்ரீநகரிலிருந்து சுமார் 50 கி.மீ., உள்ள பிஜ்பேரா வனப்பகுதியை அடுத்த செக்கிப்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, அங்கு அதிரடியாக விரைந்து சென்ற பாதுகாப்புப் படையினர், அப்பகுதியில் இணைய சேவையை நிறுத்தி விட்டு, தாக்குதலை தொடங்கினர்.

அப்போது, தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தியதால் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், பாதுகாப்பு படையினர் முன்னேறிச் சென்று, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் 6 பேரையும் சுட்டுக்கொன்றனர்.
இதே போல், மூன்று நாட்களுக்கு முன்னர், ஷோபியன் மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில், நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார் மற்றும் மூன்று ராணுவ வீரர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications