நாட்டுக்கு உழைக்கவே நேரமில்ல..- இந்திப் படத்திலிருந்து விலகிக் கொண்ட ஸ்மிருதி இரானி!
டெல்லி: ஆல் ஈஸ் வெல் இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நடிக்க நேரம் இல்லை என்று கூறி விலகிக் கொண்டார்.
ஸ்மிருதி இரானி முன்னாள் மற்றும் நடிகை. ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர்.
2003-ல் பாஜகவில் இணைந்த அவர், கடந்த தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார்.

ஆனாலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்கினார் மோடி.
தேர்தலில் போட்டியிடும் முன் உமேஷ் சுக்லாவன் இயக்கத்தில் ‘ஆல் இஸ் வெல்' எனும் இந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஸ்மிருதி. இதில் அபிஷேக் பச்சன், அசின் இணைந்து நடத்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் ரிஷிகபூருக்கு ஜோடியாக ஸ்மிருதி இரானி நடித்து வந்தார்.
இந்தப் படத்திற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. நடிகையாக இருந்த ஸ்மிருதி மத்திய அமைச்சராகிவிட்டார்.
ஆனாலும் விடுமுறை காலங்களில் அவர் நடிக்க முயற்சித்து வந்தார். அதில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் அந்த படத்தில் இருந்து தற்போது ஸ்மிருதி இரானி விலகிக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஆல் ஈஸ் வெல் படத்தில் எப்படியாவது நடித்து முடித்துவிட முயன்றேன். ஆனால் முடியவில்லை. நான் இந்த நாட்டுக்காக உழைக்க வேண்டி உள்ளது.
என்னிடம் இருந்தும், இந்த அரசிடம் இருந்தும் இந்த நாடு அதிகமாக எதிர்பார்க்கின்றன. நாட்டு மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களை நான் ஏமாற்ற முடியாது.
என்னுடைய விலகலால் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ள சிரமம் புரிகிறது.
வார இறுதி நாட்களிலாவது என்னுடைய பகுதிகளை நடித்து கொடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் திட்டமிட்டப்படி அது நடக்கவில்லை. எனவேதான் விலகுகிறேன்," என்றார்.












Click it and Unblock the Notifications