மோடியின் திடீர் பாகிஸ்தான் விசிட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் காட்டிய சோஷியல் மீடியா
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின், திடீர் பாகிஸ்தான் பயணத்தை இந்தியாவின் முன்னணி தலைவர்கள் வரவேற்றும், எதிர்த்தும் டிவிட்டரில் கருத்து கூறியுள்ளனர்.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று திடீரென பாகிஸ்தானின், லாகூருக்கு விமானத்தில் சென்று இறங்கினார். பயணத்திற்கு சில மணி நேரங்கள் முன்புதான், அவர் தனது டிவிட்டரில் இத்தகவலை தெரிவித்திருந்தார்.

இந்திய பிரதமராக வாஜ்பாய் ஆட்சி செய்த காலத்தில் பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டார். பின்னர் ஒரு தசாப்தம் கழித்து பாகிஸ்தான் சென்ற முதல்வர் பிரதமர் மோடிதான். இந்த திடீர் பயணம், உலகமெங்கிலும் கடும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.
வெளியுறவு கொள்கை முடிவை டிவிட்டரில் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டதால், டிவிட்டரிலேயே பல பிரபலங்களும் அதற்கு கருத்துகளையும் கூறினர். ம.பி முதல்வர் சிவராஜ்சிங் சவுஹான், மற்றும் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் மோடி மிகச்சிறந்த ராஜதந்திரி என்பதை நிரூபித்துள்ளதாக புகழ்ந்துள்ளது.
அதேநேரம், மோடி லாகூருக்கு சென்றது தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியுள்ளார். கடந்த முறை வாஜ்பாய் பாக். சென்று வந்தபிறகுதான் கார்கிலில் யுத்தம் வெடித்தது என டிவிட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications