சோலார் மோசடி: புது குண்டு போடும் சரிதா நாயர், மறுக்கும் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் விசாரணை கமிஷன் முன்பு ஆஜரான தொழில் அதிபர் சரிதா நாயர் கேரள முதல்வர் உம்மன் சாண்டி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
சோலார் பேனல் மோசடி குறித்து நீதிபதி சிவராஜன் கமிஷன் முன்பு இன்று ஆஜரான தொழில் அதிபர் சரிதா நாயர் தான் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.10 கோடி லஞ்சம் அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்யதான் முகமதுக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சரிதா நாயரின் குற்றச்சாட்டை உம்மன் சாண்டி மறுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர் என்ன பலன் அடைந்தார் என்பதை தெரிவிக்கட்டும். நிவாரண நிதிக்காக அவர் அளித்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. சரிதாவுக்கு நான் எந்த வகையிலும் உதவி செய்யவில்லை என்றார்.
உம்மன் சாண்டி கடந்த 25ம் தேதி விசாரணை கமிஷன் முன்பு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சரிதா விசாரணை கமிஷன் முன்பு இன்று கூறுகையில்,
சாண்டியின் முன்னாள் உதவியாளர் ஜிக்குமோன் என்னிடம் ரூ.7 கோடி லஞ்சம் கேட்டார். அதில் சாண்டிக்கான பங்கை டெல்லியில் உள்ள தாமஸ் குருவில்லா என்பவரிடம் அளிக்குமாறு கூறினார். நானும் சாந்தினி சவுக்கில் உள்ள மால் ஒன்றில் வைத்து குருவில்லாவிடம் ரூ. 1.10 கோடி அளித்தேன்.
2012ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நான் விக்யான் பவனில் வைத்து உம்மன் சாண்டியை சந்தித்து பேசினேன். அந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ததே குருவில்லா தான். எல்லாம் எப்படி உள்ளது என்று சாண்டி கேட்டார். பணம் என்னிடம் உள்ளது என்றேன். அதற்கு அவர் குருவில்லாவை தொடர்பு கொள்ளுமாறு கூறினார் என்றார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications