பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்.. விமான தளத்தை பாதுகாப்பதற்காக உயிர் தியாகம்
உதாம்பூர்: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றும் அதிகரித்த நிலையில் நேற்று ஒரு துரதிர்ஷ்ட சம்பவம் நடைபெற்று இருக்கிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்திய எல்லையோரங்களில் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் அனைத்தையும் இந்தியா தனது வான்வழி பாதுகாப்பு தொழில்நுட்பம் மூலம் முறியடித்தது. இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் உள்ள விமான தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

இதில் பாகிஸ்தானின் ட்ரோன்களை அழித்த போது அந்த ட்ரோன்களின் பாகங்கள் சிதறி இராணுவ வீரர் மீது விழுந்திருக்கிறது. இதில் படுகாயம் அடைந்த அந்த ராணுவ வீரர் தற்போது வீர மரணம் அடைந்திருக்கிறார். இதேபோன்று காஷ்மீர் மாநிலம் புன்ச் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இருந்த ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சுடுதல் நடத்திருக்கிறது.
இதில் 25வது பஞ்சாப் ரெஜிமேண்ட்டை சேர்ந்த மேஜர் பவன் குமார் நாட்டிற்காக உயர் தியாகம் செய்திருக்கிறார். சனிக்கிழமை காலை ஏழு முப்பது மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. மேஜர் பவன் குமார் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இதனால் அவருடைய சொந்த மாவட்டமான கங்ராவில் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
உயிரிழந்த மேஜர் பவன் குமார் குடும்பத்தாருக்கு இமாச்சல் பிரதேச முதலமைச்சர் சுகுவிந்தர் சிங் சுப்பு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியாகி இருப்பது எல்லையோர பகுதியில் இருக்கும் மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியை அளித்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக பாகிஸ்தான் செய்த அடாவடி செயலால் பலரும் தங்களது வீட்டை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications