கருப்பு பணத்தை கொண்டுவர மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சோனியா கேள்வி
Subscribe to Oneindia Tamil
சண்டிகார்: கருப்பு பணத்தை கொண்டுவர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹரியானா, மகாராஷ்டிராவில் வருகிற 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொடங்கினார்.

ஹரியானாவில் மெஹம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:
- நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் எதுவும் நடக்காதது போன்றும், ஒரே இரவில் நாட்டின் எல்லோருடைய தலைவிதியையும் மாற்றிவிடுவது போன்றும் ஒரு சூழ்நிலையை பாஜகவினர் உருவாக்கியுள்ளனர்.
- பாஜகவினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா?.
- பாரதிய ஜனதா ஆட்சியில் அமர்ந்தால் 100 நாட்களில் கருப்பு பணத்தை கொண்டு வந்துவிடுவோம் என்று வாக்குறுதி அளித்தார்களே என்ன ஆனது?. அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்தார்களா?. கண்டிப்பாக இல்லை.
- காங்கிரஸ் அரசின் கொள்கைகளை மோடி அரசு கடத்திக் கொண்டது. வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்பக்கூடாது.
- ஹரியானாவில் வளர்ச்சியை கொண்டுவரக்கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே.
- வாக்குகளுக்காக பாஜகவினர் உங்களுடைய உணர்ச்சிகளுடன் விளையாட முயற்சி செய்யலாம். நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- தவறான கனவுகளை கொண்டு மக்களை கவரும்விதமாக பதவியைபெற முயற்சிப்பவர்களால் மாநில வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் எதையும் செய்யமாட்டார்கள்.
- முந்தைய காங்கிரஸ் அரசின் போது கொண்டுவந்த திட்டங்களை விமர்சித்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு தற்போது திட்டங்களின் பெயர்களை மாற்றி கொண்டுவந்துள்ளது.
- ஹரியானா வேகமான வளர்ச்சியை பெற மீண்டும் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றிபெற்று ஆட்சியமைக்க செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications