லோக்சபா தேர்தல்: சோனியா, ராகுல், கேஜ்ரிவால் வாக்களித்தனர்!
டெல்லி: லோக்சபா தேர்தல் 3வது கட்ட வாக்குப் பதிவு இன்று 91 தொகுதிகளில் நடைபெற்றது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்.
உத்தரபிரதேசம், ஹரியானா, பீகார், கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று வருகிறது.

மக்கள் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இத்துடன் ஒடிஷா மாநிலத்தில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. அங்கு மாவோயிஸ்டுகளின் எச்சரிக்கை இருப்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி நிர்மான் பவானில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டெல்லி அவுரங்கஜிப் லேன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்காரி நாக்பூரில் தனது வாக்கை பதிவு செய்தார். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தனது வாக்கை சண்டிஹாரில் பதிவு செய்தார்.












Click it and Unblock the Notifications