ஜார்க்கண்ட்டில் எம்.எல்.ஏக்கள் கட்சி தாவல்- ஹேமந்த்சோரன் அரசை டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் கட்சி தாவுவதால் பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் இதனால் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார்.
இம்மாநிலத்தின் 82 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 18 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 13, ராஷ்டிரிய ஜனதா தளம் 5 மற்றும் சிறுகட்சிகளைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்கள் என 43 பேரின் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் ஆட்சி நடத்தி வருகிறார்.
அண்மையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ சந்திரசேகர் துபே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்களான ஹேம்லால் முர்மு, பித்யுத் பாரன் மகதோ ஆகியோர் பாஜகவில் ஐக்கியமாகினர். இதேபோல் ஹேமந்த் சோரனை ஆதரிக்கும் சிறு கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமாகிவிட்டனர்.
இதனால் ஹேமந்த் சோரன் அரசு சிறுபான்மை அரசாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று மாநில ஆளுநரை பாரதிய ஜனதா வலியுறுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications