அரசியல் பற்றி எதுவும் பேசலை... தப்பிக்கும் சவுரவ் கங்குலி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: அரசியல் பற்றி தாம் எதுவும் பேசப்போவது இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு லோக்சபா தேர்தலில் சீட் தருவதாகவும், விளையாட்டு அமைச்சர் பதவி வழங்குவதாகவும் பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்தாக கூறபட்டது.

பாரதிய ஜனதாவின் இந்த வேண்டுகோளை கங்குலி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட கங்குலிக்கு வலைவீசின.
இந்த நிலையில் நிக்ழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கங்குலி, அரசியல் குறித்து நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. எனது எதிர்காலம் கிரிக்கெட் சம்பந்தமானதாகவே இருக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications