கார் மீது லாரி மோதி விபத்து - கங்குலி மனைவி, மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி மனைவி சென்ற கார் மீது மோதிய லாரிய விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் இருப்பவர் சவுரவ் கங்குலி. இவரது மனைவி டோனா கங்குலி.
இவர் தனது மகளை கொல்கத்தாவில் பள்ளிக்கூடத்தில் இருந்து திருப்பி அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் வந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஜேம்ஸ் லாங் ஸரணி அருகில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இதில் கார் அதிக அளவில் சேதமடைந்தது. ஆனால், கங்குலி மனைவி டோனா காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தாகுர் பிகுர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர். மேலும், லாரியை பறிமுதல் செய்தனர்.