விடை பெற்றது தென்மேற்கு பருவமழை... நாடு முழுவதும் எவ்வளவு பெய்திருக்கு தெரியுமா?
தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துவிட்டதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்யும். அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த வட மாநிலங்களை காட்டிலும் தென் மாநிலங்களை சரியாக பதம் பார்த்தது. குறிப்பாக கேரளாவை புரட்டிபோட்டது.

மண்ணுக்குள் புதைந்தன
கேரளாவில் கொட்டிய வரலாறு காணாத மழையால் பல இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகளும் கட்டிங்களும் மண்ணுக்குள் புதைந்தன.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
அணைகள் நிரம்பின, ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஊருக்குள் புகுந்து வீட்டில் இருந்து பொருட்களையெல்லாம் அடித்துக்சென்றது. கனமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு இவற்றில் சிக்கி கேரள மாநிலத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

தென்மேற்கு பருவமழை நிறைவு
இந்நிலையில் நேற்றுடன் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்துள்ளது. நாடு முழுவதும் வழக்கமான அளவைவிட குறைவான அளவே மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிகவும் குறைவு
அதாவது 91 சதவீதம் மழைதான் பெய்துள்ளது. பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மழை மிகவும் குறைவாக பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இயல்பைவிட குறைவு
தென்மேற்கு பருவமழை காலத்தில் வழக்கமாக சராசரியாக 321.2 மி.மீ. மழை பெய்யும, ஆனால் நடப்பாண்டில் 283 மி.மீ. மழையே பதிவாகியுள்ளது. ஒரு சில மாவட்டங்களுக்கு இது இயல்பான மழை அளவாக இருந்தாலும், 14 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான மழை பெய்துள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை ஆகிய மாவட்டங்கள் அதிக மழையை பெற்றுள்ளன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications