For Daily Alerts
Just In
சபாநாயகர் தனபால் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார்.. தங்கதமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு
சபாநாயகர் தனபால் அவசரப்பட்டு தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
குடகு: சபாநாயகர் தனபால் அவசரப்பட்டு தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏவான தங்க தமிழ்ச்செல்வன் குடகு ரிசார்ட்டில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மத்திய அரசை நம்பியே இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். சபாநாயகர் தனபால் அவசரப்பட்டு தங்களை தகுதிநீக்கம் செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments
English summary
Thanga Tamilselvan said Speaker Dhanapal hastily disqualified us. OPS and EPS believes central govt.
Story first published: Wednesday, September 20, 2017, 18:07 [IST]