27 உயிர்களை பலி வாங்கிய தீ விபத்து! சோகத்தில் குஜராத்! விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
காந்திநகர்: குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் விளையாட்டு திடலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் நானா-மாவா சாலையில் சிறார்கள் பொழுதுபோக்கு விளையாட்டு திடல் அமைந்திருக்கிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இங்கு குவிந்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் விளையாட்டு திடலின் கட்டுமானம் சரிந்தது. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. தற்போது வரை 27 சடலங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தீயில் உடல்கள் முழுமையாக எரிந்துவிட்டதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த திடலுக்கு வந்த மற்றொரு சிறுவனை காணவில்லை. அவரது சடலமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக விளையாட்டு திடல் மேலாளர் நிதின் ஜெயின் மற்றும் பங்குதாரர் யுவராஜ் சிங் சோலங்கி என இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
விபத்து குறித்து பேசிய ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவ், "சனிக்கிழமை பிற்பகலில் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. எங்களால் முடிந்த அளவுக்கு சீக்கிரமாக தீயை கட்டுப்படுத்தினோம். ஆனால் உயிரிழப்புகளை தவிர்க்க முடியவில்லை. உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டிருக்கின்றன" என்று கூறியுள்ளார்.
இந்த விபத்தையடுத்து குஜராத் முழுவதும் உள்ள அனைத்து குழந்தைகள் விளையாட்டு திடல்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அம்மாநில டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மட்டுமல்லாது தீ தடுப்பான்கள், என்ஓசி சான்று இல்லாத அனைத்து திடல்களையும் உடனடியாக மூட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல, "ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்து மிகுந்த வேதனையை தருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதிக்கபட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உள்ளூர் நிர்வாகம் முழு வீச்சில் பணியாற்றி வருகிறது" என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறியுள்ளார்.
வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் தீ விபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications