கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த வீடியோ: இளகிய மனமுள்ளவர்கள் பார்க்காதீங்க
கொல்கத்தா: கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவை பார்ப்பவர்கள் திடுக்கிடுகிறார்கள்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மேம்பாலம் வியாழக்கிழமை திடீர் என இடிந்து விழுந்தது. இதில் 23 பேர் பலியாகினர், 85 பேர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் இருந்து 90 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களின் அதிர்ச்சியையும், பலியானவர்கள் குடும்பத்திற்கு இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மேம்பாலம் இடிந்து விழுந்த காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கையில் யாரும் எதிர்பாராவிதமாக மேம்பாலம் திடீர் என்று இடிந்து விழுவதை பார்க்க பகீர் என்று உள்ளது.