ஒருதலை காதலால் விபரீதம்... பாஜக எம்.எல்.ஏ.மகளுக்கு சரமாரி கத்திக் குத்து
பாஜக எம்.எல்.ஏ. மகளை கத்தியால் குத்திய மாணவனை போலீசார் கைது செய்தனர்.
புனே: மகாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ. மகளை கத்தியால் குத்திய தாக்கிய கல்லூரி மாணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். ஒரு தலை காதல் காரணமாக அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாகத் கூறப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலை சேர்ந்த பா.ஜ.க. எம்எல்ஏ சஞ்சீவ ரெட்டி போத்குவார். இவரது இளைய மகள் அஸ்வினி. புனேவில் உள்ள ஸ்ரீ பாலாஜி இந்திய தொலைதொடர்பு கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். அவரை அதே கல்லூரியில் பயிலும் ஹரியானாவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் காதலித்து வந்ததாகவும், பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த அஷ்வினியை, அந்த மாணவர் தடுத்து நிறுத்தினார். அவரிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த ராஜேஷ், கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியால் பல இடங்களில் குத்தியதுடன் அவரது கை விரலை வெட்டி எடுத்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட கல்லூரி மாணவர்கள் விரைந்து வந்து ராஜேஷை மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு அஸ்வினி உயிர் பிழைத்தார். ராஜேஷ் மீது வாகட் ((Wakad)) காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஒருதலை காதல் விவகாரத்தில் எம்எல்ஏ மகளை கத்தியால் குத்திய சம்பவம் புனேவில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications