இந்தியாவுடன் உறவை பலப்படுத்த விருப்பம் – பிரணாப் முகர்ஜிக்கு இலங்கை அதிபர் கடிதம்
டெல்லி: இந்தியாவுடனான நல்லுறவை மேலும் பலப்படுத்த இலங்கை ஆவலுடன் இருப்பதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இரு தரப்பு மக்களின் நலனுக்காக ஒருங்கிணைந்து பணியாற்றி இரு நாட்டு உறவுகளையும் புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபராக சிறிசேனா தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
அதற்கு நன்றி தெரிவித்து சிறிசேனா, பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனா 4 நாள் சுற்றுப் பயணமாக வரும் 15ஆம் தேதி இந்தியா வருகிறார்.












Click it and Unblock the Notifications