For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு கமுக்கமாக வந்துபோன இலங்கை ராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வா!

இலங்கை ராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வா இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக வந்து சென்றார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கை ராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வா இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக வந்து சென்றுள்ளார்.

இலங்கை ராணுவ தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தியா வருகை தர ராணுவம் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று கடந்த 24-ந் தேதி டெல்லி வருகை தந்தார் கிரிசாந்த டி சில்வா.

Srilanka Army Chief meeets Indian Army chief in Delhi

நல்லெண்ண பயணமாக டெல்லி வந்த இலங்கை ராணுவ தளபதி கிரிசாந்த டி சில்வாவுக்கு முப்படைகளின் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ராணுவ தளபதி தல்பீர்சிங்கை அவர் சந்தித்து பேசினார்.

பின்னர் இந்திய ராணுவ கல்லூரிக்கு சென்று அங்கு பயிற்சி பெறும் இலங்கை ராணுவத்தினரையும் சந்தித்தார். இலங்கை ராணுவ தளபதியின் வருகை ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

அவர் இலங்கைக்கு திரும்பிய பின்னரே இலங்கை ராணுவம் இந்த தகவலையும் புகைப்படங்களையும் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Commander of the Srilankan Army, Lieutenant General Crishanthe De Silva at the invitation of his counterpart in the Indian Army, General Dalbir Singh, Chief of Army Staff, made a two-day formal visit to the South Block in New Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X