ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும்: தமிழிசை சவுந்திரராஜன்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 13ம் தேதி ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் பாஜக சார்பில் சுப்பிரமணியன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

Srirankam by election will change the histry : Tamilisai

இந்நிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

‘ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிகார வர்க்கத்தின் பலத்தை எதிர்க்கொள்ள வேண்டுதல் செய்தோம். ஆளும் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் பொய் காரணங்களை கூறி பாஜக வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய மேற்கொண்ட முயற்சியில் நாங்கள் முதல் வெற்றி பெற்றுள்ளோம். பாஜகவின் வளர்ச்சியை பார்த்துதான், காங்கிரஸ் கட்சி போட்டியிட்டாமல், பாஜக வேட்பாளரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஸ்ரீரங்கத்தில் எங்கள் கட்சியின் மாநில தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அத்தனை பேரும் பிரச்சாரம் செய்வார்கள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழகத்தில் பாஜக மாற்று சக்தியாக உருவெடுக்கும்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+