ஒடிசா பூரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் கூட்ட நெரிசல்.. 3 பக்தர்கள் பலி.. பலர் காயம்
புவனேஷ்வர்: பூரி ஜெகன்நாதர் கோவிலில் இன்று ரதயாத்திரை நடந்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று தெரிந்தும் போதிய ஏற்பாடுகளை போலீசார் செய்யவில்லை என்று அங்கிருந்த பக்தர்கள் குற்றம் சாட்டினர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில், ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ரத யாத்திரையில் ஒடிசா மக்கள் மட்டும் இன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் செல்வதை காண முடியும்.

இந்த நிலையில்தான், ஒடிசா மாநிலம் பூரியில் நடைபெற்ற ரத யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெகன்நாதர் கோயில் அருகே உள்ள ஸ்ரீ குண்டிகா கோயிலில் ரதங்கள் சென்றுகொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரதங்கள் குண்டிகா கோயிலை நெருங்கிய போது, தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகரித்தது. இதில் சிலர் கீழே விழுந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நெரிசல் உண்டாகியுள்ளது. இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் பிரபாதி தாஸ், பசந்தி சாஹு ஆகிய இரண்டு பெண்களும், 70 வயதான பிரேமகாந்த் மொஹந்தி என்பவரும் அடங்குவர். இவர்கள் மூவரும் ஒடிசாவின் குர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ரத யாத்திரைக்காக பூரிக்கு வந்திருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்று தெரிந்தும் போதிய ஏற்பாடுகளை போலீசார் செய்யவில்லை என்று அங்கிருந்த பக்தர்கள் குற்றம் சாட்டினர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications