ஏடிஎம் மையத்தில் பணம் வரவில்லை.. ஆடையை அவிழ்த்து வீசி போராடிய திருநங்கை.. டெல்லியில் பரபரப்பு
டெல்லி: பணம் வராத ஏடிஎம் மிஷினால் கோபமடைந்த டெல்லியை சேர்ந்த திருங்கை ஒருவர் மேலாடையை அவிழ்த்து போட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுக்க நோட்டுகளுக்காக அலையோ அலை என அலைந்து கொண்டுள்ளனர் மக்கள். டெல்லி, காசிபூர், மயூர் விகார் பகுதியிலுள்ள ஒரு ஏடிஎம்மில் நேற்று இப்படி ஒரு கூட்டம் நீண்ட வரிசையில் நின்றது. இந்த கூட்டத்தில் இளம் திருநங்கை (பெண் போல ஆடை அணிந்திருந்தார்) ஒருவரும் நின்றிருந்தார்.

கடைசியில் அந்த ஏடிஎம் மையத்தில் பணம் வெளியே வரவில்லை என தெரியவந்தது. இதனால் சக மக்களை போலவே அந்த திருநங்கையும் கோபம் கொண்டார்.
ஆனால், கோபத்தை வேறு வடிவில் காண்பித்தார். தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி வீசிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பெண் போலீஸ்காரர்கள் வரவழைக்கப்பட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். போகிற வழியில் இன்னொரு ஏடிஎம்மில் அந்த திருநங்கை பணம் எடுத்துக்கொண்டது தனிக்கதை.












Click it and Unblock the Notifications