ஓகி புயல் குறித்து ஒன்னுமே சொல்லல.. ஹைதராபாத் வானிலை மையம் மீது கேரள முதல்வர் பாய்ச்சல்

ஓகி புயல் குறித்து எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என ஹைதராபாத் வானிலை மையம் மீது கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    குமரியை புரட்டிப்போட்ட மழை..தாண்டவம் ஆடிய ஓகி ..தென்கோடியில் என்ன நடக்கிறது?- வீடியோ

    திருவனந்தபுரம்: ஓகி புயல் குறித்து எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என ஹைதராபாத் வானிலை மையம் மீது கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

    கன்னியாகுமரி அருகே மையம் கொண்டிருந்த ஓகி புயல் தென் தமிழகத்தைம் தெற்கு கேரளாவை ஒரு கை பார்த்துவிட்டது. நேற்று பிற்பகலுக்குப் பின் கன்னியாகுமரியை விட்டு நகரத் தொடங்கிய ஓகி புயல் தற்போது லட்சத்தீவு அருகே நிலைகொண்டுள்ளது.

    இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதனால் தென் மாவட்ட அணைகள் மளமளவென நிரம்பியுள்ளது.

    கேரளாவிலும் கனமழை

    கேரளாவிலும் கனமழை

    ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல் தெற்கு கேரளாவிலும் மழை வளைத்து அடித்தது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    படகுகள் சேதம்

    படகுகள் சேதம்

    பலத்த காற்றுடன் கொட்டிய மழையால் ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

    எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

    எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

    தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓகி புயல் குறித்து கேரள அரசுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

    சீரியஸாக செயல்படவில்லை

    சீரியஸாக செயல்படவில்லை

    பேரிடர் மேலாண்மை பிரிவு ஓகி புயல் விவகாரத்தில் சீரியஸாக செயல்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். முன்னெச்சரிக்கை விடுக்கப்படாததால் கேரளாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    பிற்பகலில்தான் எச்சரிக்கை

    பிற்பகலில்தான் எச்சரிக்கை

    ஹைதரபாத் வானிலை மையம் சரியான நேரத்திற்கு எச்சரிக்கை விடுக்காததே சேதத்துக்கு காரணம் என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். வியாழக்கிழமை பிற்பகலில்தான் புயல் குறித்த எச்சரிக்கை வந்ததாக கூறிய அவர் எச்சரிக்கை தாமதமாக வந்ததால்தான் சேதம் அதிகமாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    35 மீனவர்கள் மாயம்

    35 மீனவர்கள் மாயம்

    இதனால் மீனவர்கள் கரைதிரும்ப முடியாமல் போனதாகவும் முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார். கேரள மாநிலத்தில் ஓகி புயலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 35 பேருடன் சென்ற 3 படகுகள் மாயமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+