தானத்தில் புதியது “ஸ்டெம்செல்” தானம் – கொடையாளியால் உயிர் பிழைத்த சிறுவன்
பெங்களூர்: மருத்துவ உலகில் மனித உயிர் காக்கும் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளன.
அவற்றுள் ஸ்டெம்செல் எனப்படும் குருத்தணு மாற்று சிகிச்சை முறையும் ஒன்றாகும்.
இந்த முறை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும் முன்பின் அறியாத ஒருவரைக் காப்பாற்ற முன்வரத் துணியும் மனிதர்கள் இன்னும் குறைவாகவே இருந்து வருகின்றனர்.

மரபணு சிகிச்சை முறை:
இந்த வகையான சிகிச்சைமுறையில் தலசீமியா என்ற மரபணு ஹீமோகுளோபின் நோய்க்குறைபாட்டால் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த டெல்லியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பெங்களூரை சேர்ந்த கொடையாளி ஒருவரால் உயிர் பிழைத்துள்ளான்.

ஸ்டெம் செல் நன்கொடை:
இந்த மருத்துவ முறையில் உறவினரல்லாத ஒருவரின் நன்கொடையால் இந்தியாவில் காப்பாற்றப்பட்ட முதல் நோயாளி என்ற தகவலைப் பதிவு செய்துள்ளது.

தலசீமியா நோய்:
சென்ற வருடம் டெல்லியைச் சேர்ந்த கர்விட் கோயல் என்ற ஒரு வயது சிறுவனுக்கு தலசீமியா நோய்த்தாக்கம் இருப்பது உறுதி செய்த மருத்துவர்கள் அவனுக்கு ஸ்டெம்செல் சிகிச்சை முறையைப் பரிந்துரை செய்தனர்.

கொடையாளி தேவை:
அவனது உறவினர்களில் இந்த சிறுவனுக்குப் பொருத்தமான கொடையாளி கிடைக்காததால் வெளியில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உதவிய பொறியாளர்:
இதனை அறிந்த பெங்களூரை சேர்ந்த சுமீத் மகாஜன் என்ற சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர் உதவ முன்வந்தார். இவர்களது நிறுவனத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின்மூலம் அவர் கொடையாளராக தனது பெயரைப் பதிவு செய்திருந்தார்.

வெற்றிபெற்ற சிகிச்சை:
சுமீத்தும், அவரது குடும்பத்தினரும் தந்த ஒத்துழைப்பில் கோயலுக்கான ஸ்டெம்செல் சிகிச்சைமுறை சென்ற வருடம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவ சந்திப்பு:
ஒரு வருடத்திற்கு நோயாளி பற்றிய தகவல் கொடையாளிக்குத் தெரிவிக்கப்படக்கூடாது என்ற மருத்துவ விதிமுறைகளுக்குட்பட்டு இந்த வருடம் மார்ச் மாதமே சுமீத் அந்த சிறுவனை சந்தித்தார்.

பாதிக்கப்படும் குழந்தைகள்:
மற்ற சிறுவர்களைப் போல் அவனும் இனிமேல் ஆரோக்கிய வாழ்வினை மேற்கொள்ளக்கூடும் என்பதை நேரில் கண்டறிந்த அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். ஆண்டுக்கு 12,000 குழந்தைகள் இத்தகைய நோய்த்தாக்கத்துடன் இந்தியாவில் பிறக்கின்றன.

நோய்க்குறைபாடு சதவீதம்:
மேலும் இந்திய துணைக்கண்டத்தில் பிறக்கும் இவ்வகை நோய்க்குறைபாடுகளில் 10 சதவிகிதத்தினர் இந்தியாவில் பிறப்பதாகவும் , அவர்களில் 3-4 சதவிகிதம் மரபணுத்தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்றும் மருத்துவத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications