மோடி ஏன் மௌனம்?.. டிஸ்மிஸ் செய்வதற்கு தகுதியானது அதிமுக அரசு.. சவாலை பிரதமர் ஏற்பாரா?.. காங். கேள்வி
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மோடி மௌனமாக இருப்பது ஏன் என்றும் டிஸ்மிஸ் செய்வதற்கு தகுதியானது அதிமுக அரசு என்ற சவாலை பிரதமர் ஏற்பாரா என்று காங்கிரஸ் கேட்டுள்ளது.
Recommended Video
டெல்லி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் டிஸ்மிஸ் செய்வதற்கு தகுதியானது அதிமுக அரசு என்ற சவாலை பிரதமர் ஏற்பாரா என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான பேராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 அப்பாவிகள் பலியாகிவிட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை, பெங்களூரில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
அபிஷேக் சிங்வி கேள்வி
இதுகுறித்து டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் மோடி ஏன் பாராமுகமாக இருக்கிறார். ஏன் மெளனமாக இருக்கிறார்.
ஆலை அமைப்பது
ஸ்டெர்லைட் ஆலை உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. ஆலை அமைப்பது தொடர்பாக உள்ளூர் மக்கள் கருத்தையும் கேட்கவில்லை. மக்களுடன் பேசக் கூட பிரதமருக்கு நேரம் இல்லையா. மராட்டியத்தில் இருந்து விரட்டப்பட்ட ஆலையை தமிழகத்தில் அனுமதித்தது யார்?
வீடியோவில் பதிவு
பாதுகாக்கப்பட்ட கடல்பகுதியில் இருந்து 25 கி.மீ.க்குள் ஆலையை அனுமதித்தது ஏன். துப்பாக்கிச் சூடு நடத்தும்போது ஒருவராவது சாக வேண்டும் என்று போலீஸ் கூறுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக யாரும் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.
டிஸ்மிஸ் செய்வதற்கு...
ஆட்சியர், எஸ்.பி.யை தமிழக அரசு இடம் மாற்றியது வெறும் கண்துடைப்பு நாடகம் ஆகும். டிஸ்மிஸ் செய்வதற்கு தகுதியானதுதான் அதிமுக அரசு என்ற சவாலை பிரதமர் ஏற்பாரா என்று அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.