கேரளாவில் அராஜகம்.. தமிழக லாரி மீது சரமாரி கல்வீச்சு.. கிளீனர் பலி!
தமிழக லாரி மீது கேரளாவில் நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலக்காடு தமிழக லாரி மீது கேரளாவில் நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்தில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்து, அவற்றின் விலையை குறைக்க வேண்டும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கேரளா சென்ற லாரி
எனினும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளாவிற்கு காய்கறிகள் ஏற்றிச்செல்லும் பெரும்பாலான லாரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நேற்றிரவு காய்கறி ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் ஆலப்புழா என்ற பகுதிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.

தமிழக லாரி மீது கல்வீச்சு
கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த வாளையார் அருகே கஞ்சிக்கோடு பகுதியில் லாரி மீது கற்களை வீசித்தாக்குதல் நடத்தப்பட்டது. 10க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் லாரி மீது சரமாரியாக கற்களை வீசினர்.

கிளீனர் உயிரிழப்பு
இந்த தாக்குதலில் லாரியில் கிளீனராக இருந்த முபாரக் பாட்ஷா என்பவர் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த கிளீனரைஅருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓட்டுனர் நூருல்லா கொண்டு சென்றார். மேல்சிகிச்சைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கிளீனர் பாட்ஷா உயிரிழந்தார்.

லாரி ஸ்ட்ரைக்
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் சூழலில் லாரி இயக்கியதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்
மேலும், உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த கிளீனர் பாட்ஷா, கோவையை அடுத்த அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications