காவிரி காவிரின்னு கத்தாதீங்க.... கடல் நீரை குடிநீராக்கி விவசாயம் பாருங்க... சொல்றார் சு.சாமி
டெல்லி: காவிரி காவிரின்னு கத்தாதீங்க... கடல் நீரை குடிநீராக்கி விவசாயம் பாருங்கன்னு தமிழகத்திற்கு அறிவுரை சொல்லி இருக்கிறார் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் தமிழகத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், காவிரியில் இருந்து தண்ணீரை திறந்து விடக் கோரி விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் இருந்து 50 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரி இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 15 ஆயிரம் கன அடி தண்ணீரை 10 நாளைக்கு தொடர்ந்து தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பாஜக எம்பியான சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில், காவிரி தண்ணீருக்காக கத்திக் கொண்டிருப்பதற்கு பதிலாக கடல் நீரை குடிநீராக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் நீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வாழ்க்கையே கேள்விக் குறியாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில், சுப்பிரமணியன் சுவாமியின் இந்த டுவிட்டர் பதிவு தமிழக விவசாயிகளை மேலும் அவமதிப்பது போல் உள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications