வடமாநிலங்களில் நீடிக்கும் புழுதிப் புயல்- 2 நாட்களில் 40 பேர் பலி!!
டெல்லி: டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் புழுதிப்புயல் மற்றும் மழையில் சிக்கி மொத்தம் 40 பேர் பலியானார்கள். புழுதிப்புயல் தாக்கும் அபாயம் தொடர்ந்தும் இருப்பதாக வெளியான அறிவிப்பால் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
டெல்லியில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணி வரை வெயில் கொளுத்தியது. ஆனால் சிறிது நேரத்தில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்யத்தொடங்கியது. இதனால் கடும் வெப்பத்தை அனுபவித்து வந்த டெல்லி மக்கள் இந்த குளிரினால் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் அவர்களது மகிழ்ச்சி சிறிது நேரமே நீடித்தது. மாலை 4.58 மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர புழுதிப்புயல் வீசியது. வேகமாக வீசிய காற்று சுழன்று சுழன்று அடித்ததில் பூமியில் உள்ள மண், புழுதி, சிறிய கற்கள் வேகமாக எழும்பி மக்களை தாக்க தொடங்கின.சாலைகளில் எங்கு பார்த்தாலும் புழுதி மண் பறந்தது. மக்களால் கண்களை திறந்து சாலைகளை பார்க்க முடியாத அளவுக்கு புழுதி நிறைந்து இருந்தது.
இதனால் உயிர் தப்புவதற்காக மக்கள் அலறி அடித்து பாதுகாப்பு இடங்களை தேடி ஓடினார்கள்.புழுதிப்புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப்பிடிக்காத மரங்கள் ஆங்காங்கே வேரோடு சாய்ந்தன. டெல்லி நகரில் மட்டும் சுமார் 350-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.
இந்த புழுதிப்புயலினால் டெல்லியில் 17 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மின் தடை காரணமாக மெட்ரோ ரெயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் 9 பேர் பலியாகினர்.
உத்தரபிரதேசத்தில் 14 பேர் பலி
உத்தரபிரதேச மாநிலத்தில் தலைநகர் லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த புயல்-மழையால் தலைநகர் லக்னோ, கான்பூர், முசாபர்நகர், பரேலி உள்ளிட்ட பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டது. இந்த புயல் மற்றும் மழையில் சிக்கி உத்தரபிரதேச மாநிலத்தில் ஜான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், ஈத் மாவட்டத்தில் 5 பேரும், பரபாங்கி பகுதியில் 3 பேரும் என மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் அந்த பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். லக்னோவை அடுத்த ஈத் மாவட்டம் சாராமு கிராமத்தில் நேற்று இரவு டிராக்டரில் சென்றவர்கள் மீது மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். இசுலு கிராமத்தில் மரம் விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் பலியானார்கள்.
ஜார்கண்டில் 7 பேர் சாவு
ஜார்கண்ட் மாநிலத்தில் தான்பாத், சத்ரா ஆகிய பகுதிகளை நேற்று காலை 4.30 மணி அளவில் புழுதிப்புயல் தாக்கியது. இந்த மழை ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், லடேகர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக இருந்தது.மழையின்போது அந்த பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.அதிகாலையில் சூறாவளியுடன் பெய்த மழையில் சத்ரா மாவட்டம் கோனா கிராமத்தில் மரம் முறிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தந்தை மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் ஆகிய 4 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்தனர்.
இரண்டாவது சம்பவமாக தான்பாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். கடந்த 2 நாட்களில் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட்டில் புயல் -மழைக்கு மொத்தம் 40 பேர் பலியாகி உள்ளனர்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications