காஷ்மீரில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி

Subscribe to Oneindia Tamil

Earthquake
ஸ்ரீநகர்: கிழக்கு காஷ்மீர் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.

காஷ்மீர் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 1.15 மணி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின.

அப்போது நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் ஏதோ விபரீதம் நடந்து விட்டது என எண்ணி பயத்தில் எழுந்தனர். அதன் பின்னர் தான் நில நடுக்கம் ஏற்பட்டது தெரிந்தது.

இதனால் பீதி அடைந்த மக்கள் குழந்தை குட்டிகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். இரவு முழுவதும் ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையே இப்பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நில நடுக்கம் பதிவானதாக தெரியவந்துள்ளது. இந்த நில நடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேத விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+