விசாகப்பட்டினம் கடற்கரையில் எதிரொலித்த மெரினா மாணவர் புரட்சி!
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மெரினாவைப் போல விசாகப்பட்டினம் கடற்கரையில் இளைஞர்கள் பேராட்டம் நடத்த திரண்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி விசாகப்பட்டினம் கடற்கரையில் குவிந்த மாணவர்கள் காவல்துறை கைத செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி சென்னை மெரினாவில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் அறவழிப் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.

நாட்டின் பிரபலங்களும் மாணவர்களின் அமைதி போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் என வாழ்த்தினர். இதையடுத்து மத்தியரசு மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது.
பின்னர் அவசரச்சட்டம் தமிழக சட்டசபையில் சட்டமாக்கப்பட்டது. மாணவர்களின் அறப்போராட்டமும் வெற்றிபெற்றது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மெரினா புரட்சியை போலவே விசாகப்பட்டினத்திலும் மாணவர்கள் போராட்டம் நடத்த திரண்டனர். கைகளில் தேசியக்கொடியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மாணவர்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டாம் என அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் மெரினாவில் நடைபெற்ற புரட்சிப் போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications