5ம் வகுப்பு வரை தேர்வே நடத்தக் கூடாது... மத்திய அரசுக்குப் பரிந்துரை
டெல்லி: பள்ளிகளில் 5ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு நடத்திய டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
புதிய கல்விக் கொள்கைகளை வகுக்க பரிந்துரைகள் செய்யும் வகையில் முன்னாள் கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. டெல்லி அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சைலஜா சந்திரா, டெல்லி அரசின் முன்னாள் உள்துறை செயலாளர் சேவாராம் சர்மா, குஜராத் அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதிர் மன்கத் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் ஜே.எஸ்.ராஜ்புத் ஆகியோர் அந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

அந்த குழு பல கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று, கல்வியாளர்களை சந்தித்து பேசி, தங்களுக்கு வந்த பரிந்துரைகள், கோரிக்கைகளை ஆய்வு செய்து மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகள் குறித்து தகவல் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு,
8ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயிலாக்கக் கூடாது என்று கூறும் கல்வி உரிமைச்சட்டத்தை சீரமைத்து 4ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயிலாக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு 5ம் வகுப்பில் இருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவியருக்கு மேலும் 2 வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
மாணவர்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழிற்கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
உயர் கல்வி தரத்தில் பல இந்திய நிறுவனங்களால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. அதனால் கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications