5ம் வகுப்பு வரை தேர்வே நடத்தக் கூடாது... மத்திய அரசுக்குப் பரிந்துரை
டெல்லி: பள்ளிகளில் 5ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு நடத்திய டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையிலான குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
புதிய கல்விக் கொள்கைகளை வகுக்க பரிந்துரைகள் செய்யும் வகையில் முன்னாள் கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. டெல்லி அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சைலஜா சந்திரா, டெல்லி அரசின் முன்னாள் உள்துறை செயலாளர் சேவாராம் சர்மா, குஜராத் அரசின் முன்னாள் தலைமை செயலாளர் சுதிர் மன்கத் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் ஜே.எஸ்.ராஜ்புத் ஆகியோர் அந்த குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

அந்த குழு பல கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று, கல்வியாளர்களை சந்தித்து பேசி, தங்களுக்கு வந்த பரிந்துரைகள், கோரிக்கைகளை ஆய்வு செய்து மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்பித்துள்ளது.
அந்த அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகள் குறித்து தகவல் கிடைத்துள்ளன. அதன் விபரம் வருமாறு,
8ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயிலாக்கக் கூடாது என்று கூறும் கல்வி உரிமைச்சட்டத்தை சீரமைத்து 4ம் வகுப்பு வரை மாணவர்களை ஃபெயிலாக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு 5ம் வகுப்பில் இருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். தேர்வில் தோல்வி அடையும் மாணவ, மாணவியருக்கு மேலும் 2 வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
மாணவர்களின் திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழிற்கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
உயர் கல்வி தரத்தில் பல இந்திய நிறுவனங்களால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. அதனால் கட்டுப்பாடுகளுடன் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்க வேண்டும்.
-
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்! -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா?












Click it and Unblock the Notifications