ஜன சங்க நிறுவனர் உபத்யாய மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு: சு. சுவாமி கோரிக்கை!
டெல்லி: பாரதிய ஜனதா உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் முன்னோடி அமைப்பான ஜன சங்கத்தின் நிறுவனர் உபத்யாயவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது:

கடந்த 1968ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ந் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் முகல்சாரா ரயில் நிலைய தண்டவாளத்தில் உபத்யாய மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.
இந்த மரணம் தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. உண்மைகளை மூடி மறைக்கிறது. ரயிலில் இருந்து கொள்ளையர்கள் தள்ளிவிட்டதால் உபத்யாய மரணமடைந்தார் என்பதை அவருக்கு நெருக்கமாக இருந்த நானாஜி தேஷ்முக், தட்பான்ட் தேங்கடி ஆகியோர் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆகையால் உபத்யாயவின் மரணம் தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications