பால் தாக்கரேவுக்கு ஒரு "ஸ்டாம்ப்" வெளியிடலாமே...மத்திய அரசுக்கு சு.சாமி கடிதம்
டெல்லி: மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் நினைவாக அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சிவசேனா கட்சி தனது பொன் விழா கொண்டாட்டங்களில் மும்முரமாக உள்ள நிலையில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் காரியம் ஒன்றை செய்துள்ளார். அதாவது மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை கௌரவித்து அஞ்சல் தலை வெளியிட சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பாலாசாகேப் தாக்கரே(பால் தாக்கரே) அவர்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிடுமாறு நான் இன்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
I have written to the government today asking for a special postage stamp in honour of Balasaheb Thakre
— Subramanian Swamy (@Swamy39) July 6, 2015 கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலையொட்டி தனது ஜனதா கட்சியை பாஜகவுடன் இணைத்த சாமி சிவசேனா உடனான உறவை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications