சிறுமி பலாத்கார வழக்கு: சாமியார் ஆசாராம் பாபு ஜாமீனுக்காக மும்முரமாக முயற்சிக்கும் சு.சுவாமி!!
டெல்லி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 19 மாதம் சிறையில் இருந்து வரும் சாமியார் ஆசாராம் பாபுவின் ஜாமீனுக்காக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மும்முரமாக முயற்சித்து வருகிறார்.
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 75 வயதான சாமியார் ஆசாராம் பாபு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Asaram Bapu's bail Application will be argued by me when his Ashram people stop demanding amendments.
— Subramanian Swamy (@Swamy39) June 3, 2015 இந்த வழக்கில் ஆசாராம் பாபு மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1000-க்கும் மேற்பட்ட பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையில் 121 ஆவணங்களும் 58 சாட்சிகளின் வாக்குமூலங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
சிறுமியை பலாத்காரம் செய்தது, பெண்களுக்கு எதிராக தவறாக நடந்து கொண்டது, குற்றச்சதி, கடத்தல், குற்றத்தை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும், அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் ஆசாராம் பாபுவுக்கு கிடைக்கும்.
அவரது ஜாமீனுக்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, சல்மான் குர்ஷித் என பலரும் போராடிப் பார்த்தனர். ஆனாலும் நடக்கவில்லை. தற்போது ஆசாராம் பாபுவுக்காக தாம் ஆஜராகி வாதாடப் போவதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார். ஊழல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட லாலு பிரசாத், ஜெயலலிதாவுக்கெல்லாம் ஜாமீன் கிடைக்கும் பாது ஆசாராம் பாபு மட்டும் ஏன் சிறையில் இருக்க வேண்டும் என்றும் சுவாமி கேள்வி எழுப்பியும் இருந்தார்.
@Swamy39 S. Swamy- Asaram Bapu Ji's case is 100% false & bogus, it is a conspiracy #निर्दोष_बापूजीको_न्यायमिले pic.twitter.com/JFREhtpoSY
— Vikas Katewa (@vikaskatewa4) June 3, 2015 அதேபோல் கடந்த மாதம் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆசாராம் பாபுவின் ஜாமீனுக்காக சுப்பிரமணியன் சுவாமியின் உதவியாளர்கள் முயற்சியும் மேற்கொண்டனர். இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, ஆசாரம் பாபுவின் ஆதரவாளர்கள் நிபந்தனைகளை தொடர்ந்து விதிப்பதை நிறுத்தும் போது நான் அவரது ஜாமீனுக்காக வாதாடுவேன் எனவும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான வாதங்கள் தொடர்கின்றன. ஆசாராம் பாபுவின் ஆதரவாளர்கள் இந்த வழக்கே 100% பொய்யானது எனவும் கூறி வருகின்றனர்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications