ஜெட்லியை விட சிறந்த நிதி அமைச்சராக என்னால் செயல்பட முடியும்: சுப்பிரமணியன் சுவாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை விட தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

பாஜக அரசின் கேடயமாக இருப்பவர் என்று சொல்லும் அளவுக்கு மோடியின் நம்பிக்கையை பெற்றவர்களில் ஒருவர் அருண் ஜெட்லி. மத்திய அரசின் நிதி அமைச்சராக பதவி வகித்து வரும் அவர், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மோடி அரசின் மீதான எல்லா விதமான விமர்சனங்களுக்கும் பதில் அளித்து வருகிறார்.

Subramanian Swamy says he will be a better finance minister than Arun Jaitley

இவருக்கும், கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனை, சுப்பிரமணியன் சுவாமி இடைவிடாமல் விமர்சித்ததற்கு ஜெட்லி மீதான பகையே காரணம் எனவும் கூறப்பட்டது.

இந்த பகை நேற்று வெளிப்படையாக வெடித்தது. நிதி அமைச்சர் பதவியில் ஜெட்லியை விட தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படையாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

டெல்லியில் 'இந்தியா டுடே' சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த போது கூறுகையில், 'நான் ஒரு பொருளாதார நிபுணர். அவர் (ஜெட்லி) ஒரு வழக்கறிஞர் அப்படியிருக்கும் போது அவரால் எப்படி என்னை விட சிறப்பாக செயல்பட முடியும்?' என்று கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+