சுனந்தா புஷ்கர் மரணம் பற்றி சிபிஐ விசாரணை: உள்துறை அமைச்சருக்கு சு.சாமி கடிதம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம சாவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி கடிதம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு எழுதியுள்ளார்.

கடந்த ஜனவரி 17ம்தேதி தெற்குடெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் ஊசி போட்டதற்கான காயங்கள் இருப்பதால், சுனந்தாவின் மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.
இந்தநிலையில் சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து சி.பி.ஐ தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜனதா தலைவர் சுப்ரமணியசாமி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து ராஜ்நாத்சிங் நிருபர்களிடம் கூறுகையில், "இது குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications