கொத்து கொத்தாக தமிழர்களை கொன்ற ராஜபக்சேவை விழுந்து விழுந்து வரவேற்ற சு. சாமி!
Recommended Video

டெல்லி: இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு டெல்லியில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்.
இலங்கை அதிபராக ராஜபக்சே இருந்த காலகட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்துள்ளார். ஏராளமான பெண்கள் அந்நாட்டு ராணுவத்தினரால் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
குழந்தைகள், பெண்கள் என ஈவு இரக்கமின்றி கொன்று குவித்துள்ளார். இதனால் ராஜபட்ச மீது தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்தது. ராஜபட்சவை கண்டிக்க தவறியதாக அமைச்சரவையிலிருந்து திமுகவினரை விலகச் சொன்னார் கருணாநிதி.

எதிர்ப்பு
இந்நிலையில் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஐ.நா. வரை முறையிட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. மேலும் அவர் ஐ.நா. சபையில் உரையாற்றக் கூடாது என்று திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பாஜக பிரச்சாரம்
மக்களவை தேர்தலின் போது இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்களை கொன்று குவித்த போது அந்த படுகொலையை காங்கிரஸ் ஆட்சி தட்டிக் கேட்கவில்லை என்ற கருத்தும் தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக சார்பில் முன்வைக்கப்பட்டது.

பாஜக தலைமை
ஆனால் அதே பாஜகவின் மூத்த எம்பியான சுப்பிரமணியன் சுவாமி ராஜபட்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை பாஜக தலைமை கண்டிக்கவில்லை.
|
வாய் பொத்தி நிற்கும் பாஜக தலைமை
அதுபோல் டெல்லிக்கு வந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் ராஜபட்சவையும் அவரது சகாக்களையும் சுப்பிரமணியன் சுவாமி சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார். ஏற்கெனவே நேருக்கு மாறாக கருத்துகளை சொல்லி வரும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டிக்காத பாஜக தலைமை அவரது செயல்பாடு தங்கள் கட்சிக்கு களங்கம் வந்தாலும் எதையும் கண்டிக்காமல் வாய் பொத்தி நிற்பது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications