பயமுறுத்தும் இயற்கை: மாலை நேரத்தில் திடீரென இரவு போல இருள் சூழ்ந்தது.. லக்னோ மக்கள் பீதி
லக்னோ: உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் திடீரென மாலை நேரத்தில் இரவு போல இருள் சூழ்ந்ததால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.
உ.பி மாநிலம் லக்னோவில் வழக்கம்போல நவம்பர் மாத குளிர் ஆட்டி வந்தது. பகல் நேரத்தில் சூரியன் பிரகாசமாக ஒளி வீசிக்கொண்டிருந்தது. ஆனால், இன்று மாலை 4 மணிக்கு மேல் திடீரென நகரை இருள் சூழ்ந்தது. 4.30 மணிக்கெல்லாம், இரவு 9 மணிக்கு நிகராக நகரம் முழுக்க இருள் சூழ்ந்தது. இதனால் நகரவாசிகள் கடுமையான அச்சமடைந்தனர்.
Sudden change of weather in Lucknow. pic.twitter.com/wLV0NXnVIw
— ANI (@ANI_news) December 1, 2015 சாலைகளில் விளக்குகள் எரியவிட்டபடியே வாகனங்கள் பயணித்தன. நேரில் பார்த்தவர்களால் இது மாலை நேரம் என்று உணர முடியாத அளவுக்கு இருள் கவ்வியிருந்தது.
அதேநேரம், திடீரென புழுதி புயலும் வீசத்தொடங்கியது. தூசி, புழுதி கண்களில் விழுந்ததால் வாகனங்களில் சென்றோர், சாலையோர ஷெல்டர்களில் தஞ்சம் அடைந்தனர்.
சென்னையில் வரலாறு காணாத மழை உலுக்கி வரும் நிலையில், லக்னோவில் திடீரென இருள் சூழ்ந்து அச்சம் காட்டியுள்ளது. இயற்கையின் இந்த மாறுபாடுகள் மக்கள் மனதில் பேரச்சத்தை உருவாக்கியுள்ளன.












Click it and Unblock the Notifications