திருப்பதி மடப்பள்ளியில் திடீர் தீ விபத்து.. பக்தர்கள் தரிசனத்தை நிறுத்தியது தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோவில் மடப்பள்ளியில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் மடப்பள்ளியில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்தை தேவஸ்தானம் நிறுத்தியது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு கோவில் வலதுபக்கம் உள்ள வகுலமாதா சன்னதி அருகே பிராசாதம் தயாரிக்கப்படுகிறது.

விறகு அடுப்பில் செய்யப்படும் பிரசாதமே சாமிக்கு படைக்கப்படுகிறது. அதுவே பின்னர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த மடப்பள்ளியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் உடனடியாக நிறுதப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில்ர 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ள கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications