சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் திருப்பம்.. கதிரியக்க விஷம் இல்லை என்கிறது அமெரிக்க ஆய்வம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது உடற்கூறுகளை ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வகம், கதிரியக்க விஷத்தால் அவர் கொலை செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே அது என்ன விஷம் என்பதை கண்டறியும் பொறுப்பு சிறப்பு விசாரணை குழுவின் தலைமீது விழுந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரான சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி ஹோட்டலில் தங்கியிருந்தபோது மர்மமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து, முதலில் மர்ம சாவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், கொலைவழக்காக அது மாற்றப்பட்டது. சுனந்தா உடலில் விஷம் கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. ஆனால் அது என்ன விஷம் என்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வுக்கூடத்தால் கண்டறிய முடியவில்லை.
கதிரியக்கம் ஏற்படுத்தும் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், சுனந்தா உடற்கூறு, வாஷிங்டனிலுள்ள எப்.பி.ஐ ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது. 9 மாதங்களுக்கு பிறகு ஆய்வறிக்கை சீல் செய்யப்பட்ட கவரில் வைத்து டெல்லி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில், சுனந்தா விஷம் கொடுக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் சாப்பிட்ட மருந்தில் அளவுக்கு அதிகமான கதிரியக்க தன்மை கொண்ட பொருட்கள் ஏதும் இல்லை. அந்த மருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவே கதிரியக்க பொருட்கள் கலந்துள்ளன. பொல்லேனியம் என்ற கதிரியக்க வேதிப் பொருள் ஏதும் சுனந்தா சாப்பிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அவர் கொலை செய்யப்பட்டதற்கு பயன்படுத்தப்பட்ட விஷம் எத்தகையது என்பதை அறியும் முயற்சியில் சிறப்பு விசாரணை குழு இறங்கியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications